29 வயதான இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் வீரரான அவி பரோட் (வயது 29) மாரடைப்பால் உயிரிழந்தார்.இவர் முன்னாள் இந்திய அண்டர் -19 கேப்டனும், 20 சீசனில் ரஞ்சி கோப்பை வென்ற அணியின் வீரருமான அவி பரோட் 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர்.

21 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடிய அவி பரோட்டின் குடும்பத்திற்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

29 வயதான கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பதை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!