கடந்த 24 மணி நேரத்தில் 48 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி கடந்த 24 மணி நேரத்தில் 48 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி புதுச்சேரியில் 27 நபர்களும், காரைக்காலில் 9 நபர்களும், ஏனாமில் 1 நபர்க்கும், மாஹேவில் 11 நபர்களுக்கும் என மாநிலம் முழுவதும் 48 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் 598 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லாததால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1849 ஆகவே உள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 1,24,897 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்றால் 1,27,344 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!