தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமானது முதல் கனமழை பெய்யும், மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16, 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!