அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை – அரசாணை வெளியீடு

தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகள் அண்ணா பிறந்தநாளில் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றார். இந்நிலையில், தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!