பெட்ரோல் டீசல் காரை தவிர்த்து… சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய்

சென்னை

சென்னை நீலாங்கரை வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, சூர்யா உள்ளிட்டோர் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர். நடிகர் விஜய் எப்போது வருவார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

நீலாங்கரையில் உள்ள விஜய் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்தார். முகக் கவசம் அணிந்தபடியே வந்த அவர் வாக்களித்துவிட்டு சென்றார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கருத்தை மக்களுக்கு தெரிவிக்கவும், வாக்களிப்பது கட்டாயம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் என தெரிகிறது.

Translate »
error: Content is protected !!