ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் எடுக்க டாடா நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்…

ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்திற்கு எடுக்க டாடா குழுமம் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடனில் சிக்கிய நிலையில் அதனை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் அதன் பங்குகளை விற்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு துவங்கியுள்ளது. ஏலத்திற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், டாடா நிறுவனம் ஏலத்தில் பங்குகொள்ள விண்ணப்பித்துள்ளது.

தற்போது ஏர் இந்தியா நிறுவனம் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வருகிறது. அதில்  22 ஆயிரம் கோடி ரூபாய் ஏர் இந்தியா அசர்ட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு மாற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய உரிமையாளர் வாங்குவதற்கு முன்னர் அதன் கடன்களை மத்திய அரசு அடைத்து விடும் என கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!