தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தின் புதிய ஆளுனராக நாகாலாந்து மாநிலஆளுனர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் நேற்றுமுன்தினம் இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என். ரவி இன்று காலை சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

புதிய ஆளுநரின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!