ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே 1,300 கிமீ (800 மைல்) தொலைவில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் இன்று காலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.இதனை கண்டு பயந்து மாணவி மாணவிகள் ஜன்னல் வழியாக குதித்து தப்பினர். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாகபோலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!