டெல்லியில் சுரங்க மற்றும் சுற்றுலா சார்ந்தவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் அறிவிப்பு

சுரங்க மற்றும் சுற்றுலாத் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு மாதம் ரூ .5,000 வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொழில்கள் முடங்கியுள்ளன. டெல்லியிலும் வணிகங்கள் முடங்கின. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லியில் கொரோனாவால் சுற்றுலா தொழில் ஈடுபடும் குடும்பத்தினர் வருவாய் இழந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு அவர்கள் மீண்டும் தொழில் தொடங்க மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

மேலும் இதே போன்று சுரங்கம் மூடப்பட்டு சுரங்க தொழிலார்களின் குடும்பங்களும் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கும் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்.

Translate »
error: Content is protected !!