முதல்வரை சந்தித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நன்றி…

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் இந்த ஆண்டு உழவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.  இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வாரின் கருத்துக்களை வேளாண் வழிகாட்டுதல்களையும் பள்ளிகள், கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பாடங்களாக  இணைக்க வேண்டும் என்றும் காவிரிக்கரையில் நம்மாழ்வாருக்கு நினைவு அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் மனு கொடுத்துள்ளதாக தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் செயலாளர் விமலநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!