நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு… பிரபல ரவுடி உள்பட 4 பேர் பலி.. பரபரப்பு தகவல்

டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி ஆஜரானார். அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் உடையணிந்து வந்த இரண்டு பேர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலே ஜிதேந்தர் கோகி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

மேலும் மூன்று ரவுடிகள் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கி சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!