தமிழகத்தில் 2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது – டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகம் முழுவதும் பழிவாங்கும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. திண்டுக்கல்லில், சமீபத்தில் பட்டப்பகலில் ஒரு பெண் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.இதனால் சென்னை உட்பட அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு ரவுடிகளின் கொட்டத்தை தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 2 வது நாளாக ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ரவுடிகளிடமிருந்து 5 துப்பாக்கிகள், அரிவாள் உட்பட 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!