2 அடுக்கு சாலையாக அமைய உள்ளது மதுர வாயல்- துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை

இந்தியாவில் முதல் முறையாக மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை அமையும் என்று நெடுஞ்சாலைத்துறை செயலாளர் திராஜ்குமார் கூறினார்.

இது குறித்து பேசிய அவர், சாலை குறித்த விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்றார். அணுகல் சாலைகளின் இடம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பாலத்தின் முதல் தளம் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பயன்படும் என்றும், இரண்டாவது தளம் மதுரவாயலில் இருந்து நேரடியாக துறைமுகத்திற்கு கண்டெய்னர் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் என்றும் திராஜ்குமார் கூறினார்.

Translate »
error: Content is protected !!