மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனாவால் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் தங்களது வாகன ஆவணங்களை புதுப்பிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனுமதி போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு இம்மாதம் 31 வரை நீட்டித்துள்ளது.

முன்பு, பிப்ரவரி 2020 க்கு பிறகு காலாவதியாகும் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் கடந்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதி நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அதை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

Translate »
error: Content is protected !!