ராஜஸ்தானில் ஜனவரி 31 வரை பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை

ராஜஸ்தானில் இன்று (அக்டோபர் 1) முதல் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் இந்த புகையால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் பட்டாசுகளை வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!