விடுதியில் தூக்கிட்டு இருவர் தற்கொலை- போலீஸ் விசாரணை

புதுசேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் மோகன்ராஜ் என்பவர்  பெண் ஒருவருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் இன்று காலை வெகு நேரமாகியும் அவர்களது அறை திறக்கப்படவில்லை. இதுகுறித்து பணியாட்கள் அளித்த தகவலின்படி, விடுதி நிர்வாகத்தினர் கதவை திறந்து பார்த்த போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!