உத்தரகாண்டில் பனிச்சரிவு: 6 கடற்படை வீரர்கள் மாயம்

உத்தரகாண்டின் பாகேஷ்வர் மாவட்டத்தில் பனிச்சரிவில் சிக்கி ஐந்து இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் ஒரு போர்ட்டர் உட்பட 6 மலையேறுபவர்கள் மாயமாகியுள்ளனர்.

டேராடூன்,

பனிச்சரிவு ஏற்பட்டது. 10 பேர் கொண்ட குழு செப்டம்பர் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டு நேற்று திரிசூல் மலையின் உச்சியை அடைய இருந்தபோது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்திய இராணுவம், இந்திய விமானப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மற்ற 6 வீரர்களும், மலையேற்ற உதவியாளரும் நேற்று காலை முதல் காணவில்லை. மீதமுள்ள வீரர்கள் மற்றும் மலையேற்ற உதவியாளரை தேடும் பணியில் 15 பேர் கொண்ட குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!