“ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்”.. சமந்தா குறித்து சித்தார்த் போட்ட மறைமுக பதிவு..?

சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து பற்றி அறிவித்துள்ள நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு, “பள்ளியில் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடங்களில் ஒன்று”.. “ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்” என சமந்தாவை மனதில் வைத்து தான் இந்த பதிவை வெளியிட்டார் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலிப்பதற்கு முன்பு நடிகர் சித்தார்த்தை காதலித்ததாக தகவல் பரவியது. இருவரும் பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டனர். அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறிய பிறகு, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. சமந்தா பின்னர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!