வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு – உத்தரபிரதேச அரசு

உத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .45 லட்சம் இழப்பீடு வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு ரூ .10 லட்சம் வழங்கப்படும். லக்கிம்பூர் கேரி வன்முறை விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்படும், அதே குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏடிஜி பிரசாந்த் குமார் கூறியதாவது “லக்கிம்பூர் கேரியில் நேற்று இறந்த 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசாங்கம் ரூ .45 லட்சம் மற்றும் ஒரு அரசு வேலையை வழங்கும். காயமடைந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கப்படும். விவசாயிகளின் புகார் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Translate »
error: Content is protected !!