உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இன்று மாலை 6 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த வன்முறை பற்றி அவர் பேசப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சரஞ்சித் சிங் சன்னி நேற்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டதுடன் விவசாயிகளுக்கு எதிரான மூன்று விவசாயச் சட்டங்களை ஒழிப்பது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். அதே ஆவணத்தின் நகல் பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்டது.

Translate »
error: Content is protected !!