கனமழையால் துர்கா பூஜா முன்னேற்பாடுகள் பாதிப்பு

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பெய்த கன மழையால் துர்கா பூஜா முன்னேற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கைவினை கலைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

9 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜை விழா நாளை நாடு முழுவதும் துவங்குகிறது. இதையொட்டி,  வட மாநிலங்களில் பந்தல்கள் அமைத்து துர்கா தேவியின் பிரம்மாண்ட சிலைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் கொண்டாடுவர்.

அதன்படி திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பந்தல்கள் மற்றும் சிலை தயாரிப்பு பணிகள் படு ஜோராக நடைபெற்று வந்த நிலையில் கனமழை பெய்ததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளதாக கைவினை கலைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!