25 ஆண்டுகளுக்கு பின் சாதனை – வெற்றி வாகை சூடிய திமுக

கடந்த 6,9ஆம் தேதி நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ஆனைமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது திவான்சாபுதூர் ஊராட்சி. இந்த ஊராட்சி, வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் ஒருவரே வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட, கலைவாணி சிலம்பரசன் வெற்றி பெற்று 25 வருட தோல்வியை முறியடித்து சாதனை புரிந்துள்ளது. இவருக்கு ஆதரவாக மநீம-இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர்.மகேந்திரன் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!