கொண்டாட்டத்துடன் அதிமுக பொன் விழா – ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ் மரியாதை

அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர், 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். எம்ஜிஆர்-ஆல் தொடங்கபட்ட அதிமுக அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா வசம் சென்றது. ஜெயலலிதா இறந்த பிறகு தற்போது அக்கட்சியினை எடப்பாடி பழனிசாமியும் , பன்னீர்செல்வமும் இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தான்தான் என்று சசிகலா கூறி வருகின்றார், இந்நிலையில் அதிமுக பொன்விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Translate »
error: Content is protected !!