டெங்கு காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்புக்கு 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவைச் சேர்ந்த சுருதி தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சுருதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு டெங்கு நோய்ப் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சிறுமியை மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமானதையடுத்து, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!