விருது பெற்ற பிறகு ஜனாதிபதியை சந்தித்தார் ரஜினிகாந்த்

67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், ரஜினிகாந்த் திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளார்.

தமிழில் சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தரை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது. திரையுலகில் வாழ்நாள் சாதனைக்காக ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

உடல் நலக்குறைவு காரணமாக ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்சியில் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதை வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட ரஜினி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து நலம் விசாரித்து விருது பெற்றதற்கு அவரிடம் வாழ்த்து பெற்றார்.

Translate »
error: Content is protected !!