சென்னை வந்த நடிகர்கள் ரஜினி, தனுஷ்…

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விருது விழாவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை வந்தார்.

டெல்லியில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்க்கு திரைத் துறையில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதேபோன்று இவரது மருமகன் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இன்று ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர்.

சென்னை வந்தடைந்த ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் சால்வை அணிவித்தும் கோஷங்கள் எழுப்பியும் உற்சாகமாக  வரவேற்றனர்.

Translate »
error: Content is protected !!