தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடங்க உள்ளது.

பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இன்று விற்பனை தொடங்கப்பட உள்ளது. அனைத்து கடைகளிலும் தீயணைப்பான் கருவி, நான்கு வாலி மண், ஒரு டாங்க் தண்ணீர் போண்றவை பாதுக்காப்புக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை பட்டாசுகளும் விற்பனைக்கு உள்ளன. அவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என, வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!