பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் பிரபலமான ஹீரோ. (வயது 46) இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார்.

புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை  அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விதியின் ஒரு கொடூரமான திருப்பம், புனித் ராஜ்குமார் என்ற ஒரு திறமையான மற்றும் திறமையான நடிகரை நம்மிடமிருந்து பறித்து விட்டது. இது மரணமடையக்கூடிய வயது இல்லை. வரும் தலைமுறையினர் அவரது படைப்புகள் மற்றும் அற்புதமான ஆளுமைக்காக அவரை அன்புடன் நினைவுகூருவார்கள். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி. என்று தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!