தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுப்பு

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்வதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் வரும் 1ம் தேதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு 3ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!