தீபாவளி பண்டிகை – ஓபிஎஸ், இபிஎஸ் வாழ்த்து

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், உலக நன்மைக்காக தீமையே உருவான நரகாசுரனை அழித்து மக்களை காத்த தீபாவளி திருநாளில்,அனைவர் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விடவும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளியை உற்சாகத்துடனும் பாதுகாப்புடனும் கொண்டாட வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,தீப ஒளித்திருநாளில் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இன்று பெருகும் இன்பம் என்றும் நிலைக்கட்டும். தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் இத்தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ எனது தீபாவளி நல்வாழ்த்துகள்!’ என்று பதிவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!