ஐந்து கூட்டு திருடர்கள்.. 1.5 கோடி மதிப்புள்ள 1,589 செல்போன்கள் பறிமுதல்..!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் ராய்ப்புரா ஜட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரண்டு வாகனங்களில் வந்த 5 பேரை இடைமறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஐந்து பேரும் கூட்டாக செல்போன் திருடுவதில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 1,589 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!