வடகிழக்கு பருவமழை பாதிப்பு… தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழை பாதிப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள், மழை பெய்யும் பகுதிகளில் மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Translate »
error: Content is protected !!