பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என பரவும் தகவல்…! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஓமிக்ரான் எனும் புதிய வகை வைரஸ், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி வருகிறது. புதிய கொரோனா வைரஸ் பி1.1.529 என்ற ஓமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில், இது பற்றி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, “ஒமிக்ரான் வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக வெளியான தகவல் “தவறானது” என்றார்.

Translate »
error: Content is protected !!