டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென தீ விபத்து..!

தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 59-ல் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், அறையில் இருந்த சில கோப்புகள் தீயில் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!