கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு.. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..!

இந்தியாவின் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவர் 66 வயதுடைய தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆண் ஆவார். மற்றொருவர் 46 வயது மருத்துவர் ஆவார். மேலும் 46 வயது மருத்துவருடன் தொடர்பில் இருந்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கௌரவ் குப்தா ஒமைக்ரான் கொரோனாவின் தாக்கம் பரவலாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சூழலில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தடுப்பு, முன்னெச்சரிக்கை உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!