தடுப்பூசி போட்டீர்களா..? – பயணிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் 13வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், தடுப்பூசி முகாமை பார்வையிட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த பேருந்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏறினார். அதில் இருந்த பயணிகளிடம் தடுப்பூசி போட்டீர்களா ? என்று விசாரித்தார்.

மேலும் அவர்களிடம் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தினார். விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்ய உள்ளார்.

Translate »
error: Content is protected !!