ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ராணுவ தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரியில் விபத்து நடந்த காட்டேரி பகுதியில் இருந்து கருப்பு பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். கருப்பு பெட்டியை டெல்லி அல்லது பெங்களூரு கொண்டு சென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விமானியின் பேச்சு பதிவு அடங்கிய கருப்பு பெட்டியை ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கருப்புப் பெட்டி என்பது அதன் நிறத்தைக் குறிப்பதல்ல, அதில் பல்வேறு தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!