ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் டன பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன.பின்னர் இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இரங்கல் தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிவித்து ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து ஏராளமான ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

Translate »
error: Content is protected !!