18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்தவேண்டும் – அமைச்சர் மா.சு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி பெற வேண்டும். கல்லூரி விடுதிகளில் கூட்டமாக மாணவர்கள் சாப்பிட அனுமதிக்கக் கூடாது.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். ”

இவ்வாறு அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!