ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் ரங்கெர்ட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதி துப்பாக்கி சூடு நடத்தினான். பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடி கொடுத்தனர், இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் வேறு தீவிரவாதிகள் இருக்கிறார்களா? பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!