முப்படைகளின் தலைமை தளபதியாக எம்.எம்.நரவனே நியமனம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது.

பிபின் ராவத் மறைவைத் தொடர்ந்து முப்படை படைப்பிரிவின் தலைமைத் தளபதி பதவி காலியாக உள்ளது. இதையடுத்து புதிய முப்படை தளபதியை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரை நரவானே குழுவின் தலைவராக செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் எம்.எம். நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!