அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த மாநாட்டில் “புதிய நகர்ப்புற இந்தியா” என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

நகர்ப்புற வளர்ச்சியில் மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசின் முக்கிய சாதனைகளை விளக்கும் கண்காட்சி டிசம்பர் 17 முதல் 19 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உத்தரபிரதேச முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Translate »
error: Content is protected !!