அதிமுகவினர் 4000 பேர் மீது வழக்குபதிவு..

தமிழக அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்த அதிமுகவினர் 4 ஆயிரம் நபர்கள் மீது சென்னை போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 4000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக அரசுக்கு எதிராக நுங்கம்பாக்கம், சாஸ்திரி நகர், ராயபுரம், வடக்கு கடற்கரை ஆகிய பகுதிகளில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட 4000 நபர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம், தெரிந்தே பிறருக்கு தொற்று நோய் ஏற்படுத்துதல், அரசு உத்தரவை மீறுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!