ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்

சென்னை அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல் செய்து ஆந்திர போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆந்திராவில் செம்மர கடத்தலில் தொடர்புடைய சுரேந்தர் என்பவரை ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் சென்னை அடுத்த விச்சூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மரச்சாமான் கிடங்கில் ஆந்திர போலீசார் சோதனை நடத்தினர். இதில் கதவு, ஜன்னல் உள்ளிட்ட மரச்சாமான்களுக்கு மத்தியல் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 1கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 டன் எடை கொண்ட 170செம்மரகட்டைகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். ஆந்திராவில் இருந்து செம்மரங்களை கடத்தி வந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கிய கிடங்கு உரிமையாளர் போலீசார் தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!