கடந்த 24 மணி நேரத்தில் 6 நபர்களுக்கு கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 4 நபர்களுக்கும், மாஹேவில் 2 நபருக்கும் என மொத்தம் 6 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தில் தற்போது 151 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1880 ஆக உயர்ந்துள்ளது,
மேலும் மாநிலத்தில் இதுவரை 1,27,284 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,29,315 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!