முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆடிட்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி நடத்தினர். மொத்தம் 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், கணக்கில் வராத ஏராளமான பணம், தங்கம், வெள்ளி, ஊழல் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்பான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையத்தில் தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் உள்ள மோகன் என்பவரது வீடு உள்பட 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

Translate »
error: Content is protected !!