வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பாஜகவின் முதல் தலைவரான வாஜ்பாய், 1998-ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளின் கவனத்தை இந்தியா பக்கம் ஈர்த்தார். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட வாஜ்பாய் கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது 97வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Translate »
error: Content is protected !!