கோவை அருகே லாரி மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.. 10 பேர் காயம்

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது சிறுமுகை அருகே ஆலங்கொம்பு 3வது பிரிவு சந்திப்பில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, தெற்கு திருப்பதியில் இருந்து வந்த லாரி அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையோர கடை மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!