புனேவில் ஏ.டி.எம். எந்திரம் வெடிவைத்து தகர்ப்பு.. 16 லட்சம் கொள்ளை

புனே மாவட்டம் சிம்பாலி பகுதியில் உள்ள வங்கியின் ஏடிஎம்மை அடையாளம் தெரியாத மூன்று பேர் நேற்று அதிகாலை வெடி வைத்து தகர்த்துவிட்டு, ஏடிஎம்மில் இருந்த ரூ.16 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இந்த ஏடிஎம் மையத்தை சுற்றிலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால், அதிகாலையில் வெடிச்சத்தம் அருகில் யாரும் கேட்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், நேற்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் இயந்திரம் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கூறியது, கண்காணிப்பு கேமராவில் திருடர்களின் அடையாளம் காண முடியவில்லை. இந்த சம்பவத்தின் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

Translate »
error: Content is protected !!