சென்னையில் திடீர் கனமழை

தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புறநகர், கோட்டுப்புரம், கிண்டி, சேத்துப்பட்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!